» வினைத்தொகை

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும்

எளியவழி:

(1) இத்தொகையில் இரு சொற்களே இருக்கும்

(2) முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும்

(3) இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்.

(எ-கா)
"சுடுசோறு" -
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு (எதிர்காலம்)

Advertisement