» தகர வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௩௰௭)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

௩௰௮)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

௩௰௯)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

௪௰)

தீராக் கோபம் போராய் முடியும்

௪௰௧)

துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

௪௰௨)

தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்

௪௰௩)

தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்

௪௰௪)

தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

௪௰௫)

தையும் மாசியும் வையகத்து உறங்கு

௪௰௬)

தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது

௪௰௭)

தோழனோடும் ஏழைமை பேசேல்

Advertisement