» நகர வருக்கம்
நல்லிணக்கம் அல்லல் படுத்தும்
நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
நீரகம் பொருந்திய ஊரகத்து இரு
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
நேரா நோன்பு சீராகாது
நைபவர் எனினும் நொய்ய உரையேல்
நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை