» பகர வருக்கம்
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
பீரம் பேணி பாரம் தாங்கும்
புலையும் கொலையும் களவும் தவிர்
பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
பையச் சென்றால் வையம் தாங்கும்
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
போனகம் என்பது தான் உழந்து உண்டல்