» பகர வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௫௰௯)

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

௬௰)

பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்

௬௰௧)

பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்

௬௰௨)

பீரம் பேணி பாரம் தாங்கும்

௬௰௩)

புலையும் கொலையும் களவும் தவிர்

௬௰௪)

பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

௬௰௫)

பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்

௬௰௬)

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்

௬௰௭)

பையச் சென்றால் வையம் தாங்கும்

௬௰௮)

பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்

௬௰௯)

போனகம் என்பது தான் உழந்து உண்டல்

Advertisement