» மகர வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௭௰)

மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

௭௰௧)

மாரி அல்லது காரியம் இல்லை

௭௰௨)

மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை

௭௰௩)

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

௭௰௪)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

௭௰௫)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

௭௰௬)

மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

௭௰௭)

மேழிச் செல்வம் கோழை படாது

௭௰௮)

மை விழியார் தம் மனையகன்று ஒழுகு

௭௰௯)

மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

௮௰)

மோனம் என்பது ஞான வரம்பு

Advertisement