» மகர வருக்கம்
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
மாரி அல்லது காரியம் இல்லை
மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
மேழிச் செல்வம் கோழை படாது
மை விழியார் தம் மனையகன்று ஒழுகு
மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
மோனம் என்பது ஞான வரம்பு