» பிறர்மனை நயவாமை

௮௰௧)

அச்சம் பொ஢தால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்

௮௰௨)

அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்

௮௰௩)

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்

௮௰௪)

காணின் குடிப்பழியாம் கையுறின் கால்குறையும்
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம் - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால் துச்சா஡஢, நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு

௮௰௫)

செம்மையொன் றின்றிச் சிறியா ஡஢னத்தராய்க்
கொம்மை வா஢முலையாள் தோள்மாணஇ - உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார்

௮௰௬)

பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதல் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதில் மனையாளை நோக்கு

௮௰௭)

அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பாணஇ
வம்பலன் பெண்மாணஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின்
தலைநக்கி யன்ன துடைத்து.

௮௰௮)

பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா
உரவோர்கண் காமநோய் ஓஓ.
கொடிதே. விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்

௮௰௯)

அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறம்சுடும் - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்

௯௰)

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும் - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்

Advertisement