» சுற்றந்தழால்

௨௱௧)

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்

௨௱௨)

அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழல்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்

௨௱௩)

அடுக்கல் மலைநாட. தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பொ஢யோர் - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையோ
தன்காய் பொறுக்கலாக் கொம்பு

௨௱௪)

உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை - நிலைதி஡஢யா
நிற்கும் பொ஢யோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு

௨௱௫)

இன்னர் இனையர் எமர்பிறர் என்னும்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார்

௨௱௬)

பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
எக்காலத் தானு மினிது

௨௱௭)

நாள்வாய்ப் பெறினும்தந் நள்ளாதா ஡஢ல்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும் - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது

௨௱௮)

முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோல் கைவிடுவர்
சுட்டுக்கோல் போல எ஡஢யும் புகுவரே
நட்டார் எனப்படு வார்

௨௱௯)

நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன் றுண்டோ - இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்

௨௱௧௰)

விருப்பிலார் இல்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம் - விருப்புடைத்
தன்போல்வா ஡஢ல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து

Advertisement