» பெருமை
ஈத லிசையா திளமைசேண் நீங்குதலால்
காத லவரும் கருத்தல்லர் - காதலித்து
ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.
இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார் - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பாவ திலர்
மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
இன்றிப் பலவு முள
உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர் - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பொயார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அது
உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லுற் றுழியூறும் ஆறேபோல் - செல்வர்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்காற்றிச்
செய்வர் செயற்பா லவை
பெருவரை நாட பொயோர்கட் டீமை
கருநரைமேற் சூடேபோல் தோன்றும் - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்
இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
பசைந்த துணையும் பாவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்
மெல்லிய நல்லாருள் மென்மை அதுவிறந்(து)
ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை - எல்லாம்
சலவருட் சாலச் சலவே நலவருள்
நன்மை வரம்பாய் விடல்
கடுக்கி யொருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிப் பொன்றின்றித்
துளக்க மிலாதவர் துய மனத்தார்
விளக்கினுள் ஒண்சுடரே போன்று
முற்றுற்றும் துற்றினை நாளும் அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர் - அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்