» எழுத்ததிகாரம்

௧)

ஆவி அகரமுதல் ஆயிரண்டாய் ஆய்தமிடை
மெவுங் ககரமுதன் மெய்களாம் - மூவாறுங்
கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
நண்ணுமுதல் வைப்பாகு நன்கு

௨)

ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம்
ஏன்றமெய்ம் மூவாறும் எண்ணுங்கால் - ஊன்றிய
வன்மையே மென்மை யிடைமையாம் வாட்கண்ணாய்
தொன்மை முயற்சியால் தொக்கு

௩)

ஓங்குயிர்கள் ஒற்றில்மேல் ஏறி உயிர்மெய்யாய்
ஆங்கிரு நூற்றொருபத் தாறாகும் - பாங்குடைய
வல்லொற்று மெல்லொற்று வர்க்கம் அளபெடைகள்
சொல்லொற்றி நீட்டத் தொகும்

௪)

தொடர்நொடிற் கீழ்வன்மை மேலுகரம் யப்பின்பு
அடைய வருமிகரம் அன்றி - மடநல்லாய்
மும்மையிடத் தையௌவுங் குன்றுமுன் னொற்றுண்டேற்
செம்மையுயிர் ஏறுஞ் செறிந்து

௫)

குறில்நெடில்கள் ஒன்றிரண்டு மூன்றளவு காலாங்
குறுகுமவ் வாய்தம் உயிர்மெய் - பெறுமுயிரே
மெய்யாய்தம் இஉக் குறுக்கமரை மென்மொழியாய்
ஐஔ வளவொன் றரை

௬)

உந்தியிற் றோன்றும் உதான வளிப்பிறந்து
கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து - வந்தபின்
நாசிநா அண்ணம் இதழெயிறு மூக்கெனப்
பேசும் எழுத்தின் பிறப்பு

௭)

காட்டு முயிருங் கசதநப மவ்வரியும்
ஈட்டிய வவ்வரியி னெட்டெழுத்தும் - ஈட்டு
ஞயவின்கண் மும்மூன்று நன்மொழிக்கு முன்னென்று
அயர்விலார் கட்டுரைத்தார் ஆய்ந்து

௮)

உயிரின்கண் ஒன்பா னுடன்மென்மை இம்மூன்று
அயர்வில் இடையினங்க ளாறும் - நயனுணர்ந்து
நன்மொழிகட் கீற்றெழுத்தாம் என்றுரைப்பர் ஞாலத்துச்
சொன்முடிவு கண்டோர் துணிந்து

௯)

ஆதியுயிர் வவ்வியையின் ஔவாம் அஃதன்றி
நீதியினால் யவ்வியையின் ஐயாகும் - ஏதமிலா
எஒமெய் புள்ளிபெரும் என்ப சஞயமுன்
அஐயாம் ஆதி யிடை

௰)

அகரத்திற்கு ஆவும் இகரத்திற் ஐயும்
உகரத்திற்கு ஔவும் இருவிற் - ககல்வரிய
வாருமாம் ஏயாம் மிகரத்திற்கு ஒவாகிச்
சேரும் உகரத்தின் திறம்

௰௧)

நேர்ந்தமொழிப் பொருளை நீக்க வருநகரஞ்
சார்ந்தது உடலாயிற் றன்னுடல் போஞ் - சார்ந்ததுதான்
ஆவியேற் றன்னாவி முன்னாகும் ஐஔவாம்
மேவிய ஏவும் விரைந்து

௰௨)

மெய்யீறு உயிரீறு உயிர்முதன் மெய்ம்முதலா
எய்தும் பெயர்வினையும் இவ்வகையே - செய்தமைத்தாற்
தோன்றல் திரிதல் கெடுதலெனத் தூமொழியாய்
மூன்றென்ப சந்தி முடிவு

௰௩)

மூன்றுநான் கொன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத
ஆன்ற வுயிர்ப்பின்னும் ஆவிவரின் - தோன்றும்
யகர வகர மிறுதியிடைத் தோரோர்
மகரங் கெட வகரமாம்

௰௪)

குற்றுகரம் ஆவி வரிற்சிதையு கூறியவல்
லொற்றுமுன் தோன்றுதலும் உண்டாகும் - முற்றோன்று
மென்மையதன் வல்லெழுத்தாம் வேற்கண்ணாய் முற்றுகரத்
தன்மையும்போம் ஆவியினைச் சார்ந்து

௰௫)

குற்றொற் றிரட்டுமுயிர் வந்தால் யரழக்கண்
நிற்கப்பின் வல்லெழுத்து நேருமேல் - ஒற்றாம்
பிணைந்த வருக்கம் பெயர்த்தியல்பு சந்தி
யிணைந்தபடி யேமுடியும் ஏய்ந்து

௰௬)

வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்
றேய்ந்து புகுதும் இயல்புமாம் - ஆய்ந்த
இறுதி வருமெழுத்ததா மீறரா மோரோர்
மறுவில்பதங் கெட்டு வரும்

௰௭)

வன்மை வரினே ளணலன மாண்டறவா
மென்மை வரினே ளலணனவாந் - தந்நக்கண்
முன்பின்னாந் தப்பி னணவியல்பாத் தட்டறவாம்
ஒன்றழிந்து போதலு முண்டு

௰௮)

மகரந்தான் வன்மைவரின் வர்கத்தொற் றாகும்
புகரிலா மென்மைவரிற் பொன்றும் - நிகரில்
வகரம்வந் தால்குறுகும் வவ்வழிந்து மவ்வாம்
மகரந் தவயவாம் வந்து

௰௯)

உரிவரின் நாழியி னீற்றுயிர்மெய் யைந்தாம்
வருமுயிரொன் றொன்பான் மயங்குந் - தெரியத்
திரிந்தும் விகாரங்கள் தேர்ந்தாறு முன்றும்
பொருந்தமிடம் கண்டு புகல்

௨௰)

நின்றமுதற் குற்றுயிர்தான் நீளுமுதல் நெட்டுயிர்தான்
குன்றும் உயிருயிர்மெய் கூடுமேல் - ஒன்றியவெண்
பத்தினிடை ஆய்தமுமாம் பந்நீண்டு நீளாது
மற்றவைபோய் ஈறு வரும்

௨௰௧)

ஒன்பா னொடுபத்து நூறதனை யோதுங்கான்
முன்பாந் தகரணள முன்பிரட்டும் - பின்பான
வெல்லாங்கெட் டாறிரண்டு ஆவியின்பின் வல்லுகர
நல்லா யிரமீறாய் நாட்டு

௨௰௨)

மேய விருசொற்பொருள்தோன்ற வேறிருத்தி
ஆய இடைச்சொல் அடைவித்தால் - தூயசீர்
ஆவிபோ மொற்றுப்போம் ஆங்குயிர்மெய் போமன்றி
மேவியசுட் டாங்கே மிகும்

௨௰௩)

உற்றஆ காரம் அகரமாய் ஓங்குகரம்
பெற்றிடுநீ யாமாவின் பின்னிறுதி - யொற்றணையுஞ்
சாவவக மென்புழிச் சார்ந்த இறுதியிடைப்
போவதுயிர் மெய்யென்றே போற்று

௨௰௪)

ஐந்தாறாம் ஆறு பதினாறாம் ஒற்றுமிகும்
வந்துறழு மன்ன வயனலக்கள் - சந்திகளின்
அல்லா தனவும் அடக்குவாய் கண்டடக்க
எல்லாம் முடியும் இனிது

Advertisement