» கும்மி

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

'நாயை இழுத்துப் புறம் விடுப்பீர்-கெட்ட
நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே!-இந்தப்
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்!-என்
தூய குடிக்கொரு தோஷத்தையே தந்த
துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை-தன்னில்
போய் அடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர்
போட்டுக் கொலை செய்யக் கூட்டிச் செல்வீர்!'

என்றுரைத்தான், இருசேவகர்கள்-அந்த
ஏந்திழை அண்டை நெருங் கிவிட்டார்!-அயல்
நின்ற கொலைஞர், உதாரனை யும்' நட
நீஎன் றதட்டினர்! அச்சமயம்-அந்த
மன்றி லிருந்தவேர் மந்திரிதான்-முடி
மன்னனை நோக்கி யுரைத்திடுவான்-'நீதி
அன்றிது மங்கைக் கிழைத்திருக்கும் தண்டம்;
அன்னது நீக்கி யருள்க என்றான்

Advertisement