» வருவாய்,வருவாய்-கண்ணா

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

[பல்லவி]
வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !


[சரணம்]
உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் - கண்ணா !

இணைவாய் எனதா வியிலே - கண்ணா !
இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா !
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய் !

எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவிக் கினியா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா !
துணையே, அமரர் தொழும்வா னவனே !