» ஒலி அமைப்பு

நடையியல் நினைவாற்றலுக்குத் துணையாக எதுகை, மோனை போன்ற உத்திகள் கையாளப்படுவதைப் போன்றே, தொடர் நிலையிலும் சில தொடர்கள் ஒலி நயத்தையே கையாளப்படுகின்றன.
செய்யுளியல் முப்பத்து நான்கு உறுப்புகளைத் தொல்காப்பியர் கூறுகிறார். அவற்றுள்
மாத்திரை எழுத்து அசை சீர்
அடி யாப்பு மரபு தூக்கு
தொடை நோக்கு பா அளவியல்
இந்த பனிரெண்டு உறுப்புகளும் யாப்பு வரையறையை விளக்குகின்றன. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாவகைக்கு ஒலி நயமே அடிப்படையாக அமைந்துள்ளது. அந்த ஒலி நயத்தை அடையும் வழிகளாகவே இவ்வுறுப்புகள் வகுக்கப்பட்டுள்ளன.

Advertisement