» நிலைபேறாக்கம்

நிலைபேறாக்கம் என்பது மூன்று கொள்கைகளை அடிப்படையாக கொண்டதாகும். மொழிப்பொதுமை (efficiency) எடுத்தாளும் எளிமை (easy adoptability) என்ற மூன்றும் நிலைபேறாக்கக் கொள்கைகளாகக் கருதப்படுகின்றது. தொல்காப்பியர் நிலைபேறாக்கத்தின் இன்றியமையாமை உணர்ந்த நிலையிலேதான் அவர் காலத்திய வழக்குச் சொற்களையும், இலக்கணக்கூறுகளையும் நிலைபேறாக்கம் செய்து கொள்ள முடிகின்றது.

வனப்பு, பற்றித் தொல்காப்பியர் எட்டு வகையாக இணைத்துக் கூறியுள்ளார். அவை அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு, இச்சொற்கள் அனைத்தும் நிலைபேறாக்கம் பெற்றுவிட்ட நிலையிலும் காண்கிறோம். இறுதியாக மொழி நடையைக் காண்பது மொழியியலாரின் பணியாகவும், ஏனைய நடையைக் காண்பது இலக்கியத் திறனாய்வாளரின் பணியாகவும் அமைந்துள்ளன. இவ்விரண்டையும் வேறுபடுத்தி உணராமல் மொழி நடையைக் காணமுடியாது. தொல்காப்பியர் எடுத்தாண்டுள்ள மொழி நடையில் மொழிக்கூறுகள் புதுப்பொருளையும் புதுச்சுவையும் தரும் நிலையில் அமைந்திருக்கக் காண்கிறோம்.

Advertisement