» ஓசைநயம்

ஒரு மொழியிலுள்ள கருத்துக்களை மற்றொரு மொழியில் மாற்றும் பொழுது மூல மொழியில் காணப்படும் பொருள், சுவை தன்மை போன்றவை சிறிதும் மாறாமலும் பெயர்க்கப்படும் மொழியின் அமைப்பு மற்றும் தன்மைக்கேற்பவும் அமைக்கப்படும் முறையாகும். தொல்காப்பியர் வாசகனுக்குச் சேரும் முறையில் மூல மொழியினை ஓசைநயத்தோடு அமைத்துள்ளார்.
இவற்றுள், வண்ணம் என்ற செய்யுள் உறுப்பு இருபது வகைப்படும். இவை ஓசைநயத்தை காட்டுவனவாகும். அவை பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒருஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம்.

Advertisement