» உயிர்மெய் வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௰௪)

கண்டொன்று சொல்லேல்

௰௫)

ஙப் போல் வளை

௰௬)

சனி நீராடு

௰௭)

ஞயம்பட உரை

௰௮)

இடம்பட வீடு எடேல்

௰௯)

இணக்கம் அறிந்து இணங்கு

௨௰)

தந்தை தாய்ப் பேண்

௨௰௧)

நன்றி மறவேல்

௨௰௨)

பருவத்தே பயிர் செய்

௨௰௩)

மண் பறித்து உண்ணேல்

௨௰௪)

இயல்பு அலாதன செய்யேல்

௨௰௫)

அரவம் ஆட்டேல்

௨௰௬)

இலவம் பஞ்சில் துயில்

௨௰௭)

வஞ்சகம் பேசேல்

௨௰௮)

அழகு அலாதன செய்யேல்

௨௰௯)

இளமையில் கல்

௩௰)

அரனை மறவேல்

௩௰௧)

அனந்தல் ஆடேல்

Advertisement