» உயிர்மெய் வருக்கம்
கண்டொன்று சொல்லேல்
ஙப் போல் வளை
சனி நீராடு
ஞயம்பட உரை
இடம்பட வீடு எடேல்
இணக்கம் அறிந்து இணங்கு
தந்தை தாய்ப் பேண்
நன்றி மறவேல்
பருவத்தே பயிர் செய்
மண் பறித்து உண்ணேல்
இயல்பு அலாதன செய்யேல்
அரவம் ஆட்டேல்
இலவம் பஞ்சில் துயில்
வஞ்சகம் பேசேல்
அழகு அலாதன செய்யேல்
இளமையில் கல்
அரனை மறவேல்
அனந்தல் ஆடேல்