» பொறையுடைமை

௭௰௧)

கோதை யருவிக் குளர்வரை நன்னாட
பேதையொடு யாதும் உரையற்க - பேதை
உரைக்கிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழக்கிக் கழிதலே நன்று

௭௰௨)

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தா஡஢த் திருத்தல் தகுதிமற் - றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்

௭௰௩)

காதலார் சொல்லும் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப
ஆவ தறிவார்ப் பெறின்

௭௰௪)

அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அ஡஢து

௭௰௫)

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஓழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்
து஡ற்றாதே து஡ர விடல்

௭௰௬)

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அ஡஢து

௭௰௭)

பொ஢யார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அ஡஢ய பொறுப்பஎன் றன்றோ - அ஡஢யரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்

௭௰௮)

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்கும் துணையார்க் குரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார்

௭௰௯)

இன்பம் பயந்தாங் கிழிவு தலைவா஢னும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட
பழியாகா ஆறே தலை

௮௰)

தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்

Advertisement