» ஞகரயெதுகை

ஆசிரியர் : மண்டல புருடர்.
௩௰௮)

துஞ்சலே நிலை பேறாகுந் துயில் சோம்பு சாவுமாகும்
பஞ்சரஞ் செருந்தி கூடாம் பரதரே கழியர் நாய்கர்
கஞ்சமே தாளங் குல்லை கமல வெண்கலம் வட்டப்பம்
குஞ்சம் ஈயோட்டி நாழி குறள் குன்றி குறளைச் சொல்லே

௩௰௯)

நெஞ்சென்ப மன மார்பின்பேர் நிழல் செல்வங் குளிர்ச்சி சாயை
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முது கிவ்வைந்தே
வஞ்சி மேற்செல வோரூர் பா வல்லி மென்மருங்குற் பெண்ணாம்
தஞ்சமே எளிமை யென்ப தரு பற்றுக்கோடுமாமே

௪௰)

அஞ்சனங் கறுப்பு மை திக்கானையி லொன்று முப்பேர்
மஞ்சரியே பூங்கெத்து மாலை செந்தளிருமாகும்
அஞ்சலி வணங்கல் வாவற்பறவையு மாகுமென்ப
இஞ்சியே புரிசை யிஞ்சி யெறுழென்ப வலி தண்டாமே

௪௰௧)

கிஞ்சுக முருக்குச் செம்மை கிருட்டினன்தான் மால் பார்த்தன்
கஞ்சமே கண்ணாடி கரிக்குருவிக்கும் பேரே
பஞ்சமே சிறுமை யைந்தாம் பகழி யம்பிதன் குதைப்பேர்
வஞ்சனை மாயை பொய்யா மாயன் மால் கருநிறத்தோன்

௪௰௨)

குஞ்சியாண் மயிர் புட் பார்ப்புக் குன்றியின் கொடிமுப்பேரே
வஞ்சமே கபடம் வாளா மாயம் வஞ்சனை பொய் யென்ப
கஞ்சனே குறளன் வேதன் களங்கந்தான் அழுக்குக் குற்றம்
கஞ்சிகை சிவிகை யாடை கட்டிடு திரையுமாமே

Advertisement