» நகரயெதுகை

ஆசிரியர் : மண்டல புருடர்.
௱௨௰௪)

இந்தன மிசையே காட்டம் எரி யிடு கனலுமாகும்
சந்தமே நிறம் வனப்புச் சாற்றிய கவிதை சாந்தம்
கந்த மிந்திரியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம்
மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள்

௱௨௰௫)

அந்திலாங் கசையிடப் பேர் அணவலே அணுகல் புல்லல்
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் யிசைப்புமப்பேர்
நந்தியே சிவனு ேமுறும் நந்தி யீச்சுரனு முப்பேர்
உந்தி தேருருளே யாறே உவரி நீர் சுழியே கொப்பூழ்

௱௨௰௬)

கந்து பண்டியுளிரும்புங் கம்பமும் யாக்கைமூட்டும்
கந்துகங் குதிரை பந்தாங் கன மென்ப புயல் பாரப் பேர்
பந்து கந்துகமு மட்டுப்படர்நீர்தூந்துருத்தியும் பேர்
குந்தள மாதரோதி குழற்கொத்து குருளை முப்பேர்

௱௨௰௭)

வேந்தனே அரசன் திங்கள் வியாழ னிந்திர னாதித்தன்
காந்தார மிசை காடென்ப காழகங் கருமை தூசாம்
ஏந்தலே பெருமை மேடா மெஃ குருக்கொடு வேல் கூர்மை
கூந்தல் பெண் மயிர் பீலிப்பேர் குவலயங் குவளை பூமி

௱௨௰௮)

அந்தரம் முடிவு பேதம் அண்டமோடிடை நாற்பேரே
கந்தரமென்ப மேகங் கழுத்தொடு மலை முழைப்பேர்
மந்தாரந் தரு மரஞ் செவ்வரத்தமு மாகுமென்ப
சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை

௱௨௰௯)

கந்தருவம் பண்வாசி கவந்த மென்பது நீர் மட்டை
குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல்
செந்துவோர் நரக மோரி சீவனோ டணுவு நாற்பேர்
சிந்து நீர் முச்சீ ராறு கடல் குற ளொறுதேசப்பேர்

௱௩௰)

அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை
நந்தென்ப நத்தை சங்கா நாறுதல் மணமுண்டாதல்
மைந்தனே திறலோன் சேயாம் வசந்தமே வேனில் வாசம்
வந்தியர் புகழ்வோர் பேரு மலடிகள் பேருமாமே

௱௩௰௧)

விந்தமோ ரெண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பாம்
அந்தணர் அறவோர் பார்ப்பர் அணி படை வகுப் பணிப்பேர்
அந்தகன் குருடன் கூற்றாம் அங்காரகன் றீச்செவ்வாய்
மந்தகன் சனி கூர்ப்பில்லாமனுடனு மிருபேராமே

Advertisement